Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரசை ஒருபோதும் நம்பக்கூடாது : பிரதமர் மோடி

மார்ச் 31, 2024 12:39

புதுடெல்லி : இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின் போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இதுதொடர்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆர்டிஐ மூலம் பல்வேறு தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளார். இந்த தகவல்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ கண்களை திறந்து வைப்பதோடு திகைக்க வைக்கிறது! கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாகரிகமாக கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன . இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்துகிறது மற்றும் காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்பதை  மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவே,  காங்கிரஸின் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” என சாடியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்